search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்.பி. ஆய்வு
    X

    வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள இடத்தில் கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்.பி. ஆய்வு

    • ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பூங்கொடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க ப்பட்ட அறையில் பாது காப்பாக வைப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திண்டுக்கல்:

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி க்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமையவுள்ள ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பூங்கொடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் தெரிவிக்கையில்,

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 1.1.2024-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் என 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலு க்கான வாக்கு எண்ணிக்கை மையம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலை க்கழக கல்லூரியில் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு செய்யும் எந்திரம் வைப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை, முகவர்கள் அமரும் பகுதி, பத்திரிகையாளர்கள் பகுதி, கண்காணிப்பு கோபுரம் அமையும் இடம், வரவேற்பறை அமைவிட ங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க ப்பட்ட அறையில் பாது காப்பாக வைப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×