search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணியின்போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்த   7 பேரின் குடும்பங்களுக்கு ரூ.35 லட்சம் நிவாரண உதவித்தொகை-   தருமபுரி கலெக்டர் சாந்தி வழங்கினார்
    X

    மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    பணியின்போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்த 7 பேரின் குடும்பங்களுக்கு ரூ.35 லட்சம் நிவாரண உதவித்தொகை- தருமபுரி கலெக்டர் சாந்தி வழங்கினார்

    • மரணமடைந்த 7 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் விபத்து மரண நிவாரண உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
    • 14 குழந்தைகளுக்கு ரூ.60,650- மதிப்பிலான உதவி உபகரணங்களையும் வழங்கினார்கள்.

    தருமபுரி ,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மாவட்ட தொழிலாளர் நல சமூக பாதுகாப்புத்திட்ட உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பணியின்போது விபத்து ஏற்பட்டு, எதிர்பாராத விதமாக மரணமடைந்த 7 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் விபத்து மரண நிவாரண உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட ஒரு குழந்தைக்கு ரூ.1,950- மதிப்பிலான ஒரு நடைபயிற்சி சாதனமும், மாற்றுத்திறன் கொண்ட 3 குழந்தைகளுக்கு தலா ரூ.7,900- வீதம் ரூ.23,700- மதிப்பிலான 3 மடக்கு சக்கர நாற்காலிகளையும், மாற்றுத்திறன் கொண்ட 10 குழந்தைகளுக்கு தலா ரூ.3,500- வீதம் ரூ.35,000- மதிப்பிலான 10 காதொலி கருவிகளையும் என மொத்தம் மாற்றுத்திறன் கொண்ட 14 குழந்தைகளுக்கு ரூ.60,650- மதிப்பிலான உதவி உபகரணங்களையும் வழங்கினார்கள்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் டிஆர்ஓ அனிதா, திட்ட இயக்குநர் (பொ), பாபு, தனி துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத்திட்டம் சாந்தி, உதவி ஆணையர் (கலால்) தணிகாசலம், உதவி ஆணையர் (தொழிலாளர் நலன்) முத்து, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×