search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
    • வீரபத்திர சாமிக்கு தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள போசிநாயக்கன அள்ளியில் ஆடி 18-யை முன்னிட்டு முத்துமாரியம்மன், துர்க்கை, வைஷ்ணவி, மகேஸ்வரி அம்மனுக்கு 11-ம் ஆண்டு தீமிதி விழா நடைபெற்றது.

    இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    காலை வீரபத்திர சாமிக்கு தலை மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து முத்துமாரியம்மன், மாரியம்மன் சாமிக்கு திருவீதிபவனி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தீமிதி விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    Next Story
    ×