search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வெளியிட்ட தருமபுரம் ஆதீனம்
    X

    கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை தருமபுரம் ஆதீனம் வெளியிட்டார்.

    சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வெளியிட்ட தருமபுரம் ஆதீனம்

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே மாதம் 24-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ரூ.12 கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இங்கு லிங்கம் , மூர்த்தம் சங்கமம், ஆகிய மூன்று வடிவங்களில் சிவபெருமான் அருள் புரிந்து வருகிறார்.

    கோயிலில் மலை மீது உமா மகேஸ்வரர், சட்டைநாதர் சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது.

    இக்கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதற்கான ரூ.12கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.

    இதனிடையே கோயில் கும்ப்பாபிஷேக பத்திரிக்கை அச்சிட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, திருநிலைநாயகிஅம்மன், சட்டநாதர் சுவாமி உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்து படைக்கப்பட்டது.

    அதன்பின்னர் கும்பாபிஷேக முதல் பத்திரிக்கையை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கிட அதனை திருப்பணி உபயதாரரும், சீர்காழி தமிழ்சங்க தலைவருமான இ.மார்கோனி பெற்றுக்கொ ண்டார்.

    அருகில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளனர்.

    Next Story
    ×