என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பதை படத்தில் காணலாம்.
தருமபுரியில் சரக்கு வேனில் 750 கிலோ குட்கா பொருட்களை-கடத்தி வந்த 2 பேர் கைது
- தருமபுரியில் இன்று சரக்கு வேனில் 750 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
- மதிக்கோன்–பாளையம் போலீசார் குண்டல்பட்டியில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டபோது குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் பிடிபட்டனர்.
தருமபுரி:
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தருமபுரி வழியாக தமிழகத்திற்கு அடிக்கடி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவை மர்ம நபர்கள் ரெயில் மற்றும் பஸ், சரக்கு வாகனங்களில் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ேஜசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போலீசாருக்கு உத்தர விட்டார். அவரது உத்தர–வின்பேரில் மதிக்கோன்–பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் போலீசார் இன்று குண்டல்பட்டியில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்தது. அதனை போலீசார் வழிமறித்து சோதனை செய்ததில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவக்குமார்(வயது30), கிருஷ்ணகிரியை சேர்ந்த குமார் (35) ஆகிய 2 பேர் வண்டியில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்–பட்ட குட்கா பொருட்களை மூட்டை, மூட்டையாக கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் இருந்து பெரம்பலூருக்கு கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
உடனே போலீசார் 2பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சரக்கு வேன், 750 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






