search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில்மாதாந்திர ஆய்வு கூட்டம்
    X

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில்மாதாந்திர ஆய்வு கூட்டம்

    • காவல் கண் காணிப்பாளர் அலுவ லகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவ லகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளின் நிலையை குறித்தும் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு, எஸ்.பி. அறிவுரை வழங்கினார்.

    மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் வழங்கினார்.

    இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துறை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், மகாலட்சுமி, செல்வி, சிந்து மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×