என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் மகளிர் உரிமைத்தொகை பெற 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்று தொடக்கம்
- விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
- விண்ணப்ப பதிவிற்கான இணையதளத்தினை பயன்படுத்து குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 05.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி ரோட்டரி அரங்கத்தில் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார். மேலும், விண்ணப்பங்களைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் கடந்த 24.7.2023 முதல் தொடங்கப்பட்டு இன்றுடன் (4.08.2023) நிறைவு பெறுகிறது. இரண்டாம் கட்டமாக 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் நடைபெறும் 2-ஆம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களின் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது.
இப்பயிற்சியில் விண்ணப்பதிவு தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், விண்ணப்பத் தாரர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை சரியாக பூர்த்தி செய்திடவும், பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக பராமரித்திடவும், இத்திட்ட விண்ணப்ப பதிவிற்கான இணையதளத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இப்பயிற்சியில் தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வம், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்