search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி காவல்துறை சார்பில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 97 மனுக்கள் மீது உடனடி தீர்வு
    X

    தருமபுரி காவல்துறை சார்பில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 97 மனுக்கள் மீது உடனடி தீர்வு

    • நிலத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 118 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
    • போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனு தாரர்ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்ட னர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட போலீசார் சார்பில் வாரந் தோறும் புதன்கிழமை தரும புரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொது மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வர வழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நிலத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 118 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் 97 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 21 மனுக்கள் தொடர் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமில் தருமபுரி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சரவணன், செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×