என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை நடராஜர் கோவிலில் குத்து விளக்கு பூஜை
    X

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை நடராஜர் கோவிலில் குத்து விளக்கு பூஜை

    • நடராஜர் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
    • சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×