search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தருமபுரி மாவட்ட தி.மு.க.வினர்  மாலை அணிவித்து மரியாதை
    X

    கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவபடத்திற்கு தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

    5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தருமபுரி மாவட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி ‌கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.
    • தி.மு.க.வினர் கலைஞர் அறிவலாயத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி,

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. தருமபுரி நகரசெயலாளர் நாட்டான் மாது தலைமையில் ராஜகோபால் கவுண்டர் பூங்காவிலிருந்து தொடங்கிய அமைதி பேரணி புறநகர் பஸ் நிலையம் கடைவீதி வழியாக வந்து 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் கலைஞர் அறிவலாயத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர்அணி துணை செயலாளர் தரும செல்வன், மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாணவர் அணி அமைப்பாளர் பெரியண்ணண், தடங்கம் இளைய சங்கர், மாவட்ட தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கி–ணைப்பாளர் கவுதம் உள்பட பகுதி செயாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×