search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உள்ள   அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்   -மக்களின் சந்தேகத்துக்கு அதிகாரிகள் விளக்கம்
    X

    தருமபுரி நகர பஸ்நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தை படத்தில் காணலாம்.

    தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் -மக்களின் சந்தேகத்துக்கு அதிகாரிகள் விளக்கம்

    • ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.2 -கும் வழங்கப்படுகிறது.
    • உணவு அருந்த வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணமே உள்ளது.குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுவதே இதற்கு காரணம் என்றனர்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் ஏழைகளின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ஏழைகளின் பசியை போக்கவும், கூலி தொழிலாளர்களின் வசதிக்கேற்பவும் மலிவு விலையில் உணவு வழங்க மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2015-ம் ஆண்டு அம்மா உணவகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது ஏழை மக்களுக்காக காலையில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.2 -கும் வழங்கப்படுகிறது.

    தருமபுரி அம்மா உணவகம் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள். பஸ் நிலையத்தில் சிறு சிறு பொருட்கள் விற்று பிழைப்பு நடத்துவோர் என்று பல தரப்பினருக்கும் அட்சய பாத்திரமாக திகழ்கிறது.

    தற்போது அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாக வரும் தகவல்களை அடுத்து அவை மூடப்ப டுமா என்று அவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கின்றனர்.

    ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அம்மா உணவகங்களை தொடர்ந்து செயல்படுத்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நஷ்டம் ஏற்பட்டாலும் மக்களின் பசி போக்கும் அம்மா உணவகங்கள் மூடப்படாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறும்போது, அம்மா உணவகங்களில் வாழை இலை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

    இதற்காகும் செலவு, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகமே ஏற்கிறது. இங்கு உணவு அருந்த வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணமே உள்ளது.குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுவதே இதற்கு காரணம் என்றனர்.

    Next Story
    ×