search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாணார்பட்டி அருகே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
    X

    பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்ட காட்சி.


    சாணார்பட்டி அருகே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

    • மகாலெட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட ஆண்டிபட்டி யில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடை த்தும், சாட்டையால் உடலில் அடித்துக்கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பெ ருக்கு விழா நடத்தப்பட்டது.

    முன்னதாக மகாலட்சுமி அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்ப ட்டது. பின்னர் அம்மன் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து அம்மன் எழுந்தருளி பக்த ர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களின் சேர்வை ஆட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டது. அதனை த்தொ டர்ந்து இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதில் கம்பிளியம்பட்டி, சிலுவத்தூர், செங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைக் காண சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்தி ருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×