search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X

    பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

    கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    • ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவிலில் இவ்வருட திருவிழா கடந்த 8ந் தேதி இரவு தொடங்கியது.
    • நேற்று அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் பூ குழி இறங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், பிள்ளை யார்நத்தம் கிராமத்தில் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 ஆண்டுகள் கொரோ னாவுக்கு பிறகு இவ்வருட திருவிழா கடந்த 8ந் தேதி இரவு தொடங்கியது.

    9ந் தேதி காலையில் அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்று கரைக்கு சென்று அம்மனை வழிபாடு செய்து அங்கிருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மேலும், சிறப்பு அலங்கா ரங்கள் செய்யப்பட்டு, தீபா ராதனை செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் பூ குழி இறங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர். இந்நிகழ்ச்சியில் பிள்ளையார்நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராள மான கிராம பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழி பட்டனர்.

    Next Story
    ×