search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறைகேடு புகார்: தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளர் சஸ்பெண்டு
    X

    முறைகேடு புகார்: தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளர் சஸ்பெண்டு

    • ஸ்ரீரெங்கநாததுரை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீரெங்கநாததுரை. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஆவினுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் நெல்லை ஆவினில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர், தூத்துக்குடி ஆவின் துணை பொது மேலாளர் ஸ்ரீரெங்கநாததுரையை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×