என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
கொடைரோடு அருகே டெங்கு விழிப்புணர்வு கூட்டம்
டெங்கு காய்ச்சல் கணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
கொடைரோடு:
கொடைரோடு அருகே மாலையகவுண்டன் பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் கணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார அலுவலர் டாக்டர் வினோத் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட பூச்சியாளர் துறை அலுவலர் தெய்வேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி தாளாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், இளநிலை பூச்சியாளர் விஜயா, சுகாதார ஆய்வாளர் மாரிவேல், ஆசிரியர் பொன்ராம் மற்றும் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






