என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
    X

     கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி. 

    கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    • 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
    • தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

    வாழப்பாடி:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், வாழப்பாடியில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.

    வட்டாரத் தலைவர் விஜயராஜ், செயலாளர் அண்ணாமலை, பொரு–ளாளர் இளங்கோவன் மற்றும் வாழப்பாடி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொணடனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.

    நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்கிட வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பபப்ட்டது.

    Next Story
    ×