என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்க கோரிக்கை
- கரும்பு சக்கைநில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம். மற்றும் நிர்வாகிகள் தேர்வு கூட்டம். கோபாலபுரம் அருகே அம்மாபாளையத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது.
உழவர் பேரியக்கம் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சின்னசாமி வரவேற்றார். சத்யராஜ், ஆனந்த், முருகன், சீனிவாசன், ராஜேந்திரன், முருகேசன், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பா ளர்களாக மாநில உழவர் பேரியக்க செயலா ளர் வேலுசாமி, தர்மபுரி கிழக்கு மாவட்டம் செயலாளர் அரசாங்கம் கலந்து கொண்டனர்.
தருமபுரி கிழக்கு மாவட்ட தலைவர் அல்லி முத்து உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் முழுவதுமாக ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆலை கழிவுகள் முழுவதுமாக விவசாயி களின் நலன் கருதி இலவசமாக வழங்க வேண்டும்.
கரும்பு சக்கையின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.






