என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேய்பிறை அஷ்டமியில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
- தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் இங்குள்ள சொர்ணஆகர்சன பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் இங்குள்ள சொர்ணஆகர்சன பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
அதன்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைதொடர்ந்து மகாதீபாராதணை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






