search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் அருகே கடன் தொல்லையால்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயற்சி; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த 5 பேரை படத்தில் காணலாம்.

    காரிமங்கலம் அருகே கடன் தொல்லையால்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயற்சி; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர்.
    • போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (38), இவரது மனைவி மகாலட்சுமி (33), இவர்களுக்கு குருமூர்த்தி(16), குருபிரசாந்த் (15) என்ற இரு மகன்களும், மற்றும் ரிஷபஸ்ரீ (13) என்ற ஒரு மகளும் உள்ளனர். பூபதி தனது சொந்த கிராமத்தி லேயே சொந்தமாக டைலர் கடை வைத்து வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் பூபதி தீபாவளி சீட்டு நடத்தி நஷ்டமடைந்ததால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சுமார் ரூ.25 இலட்சம் ரூபாய் வரை கடன் பெற்று அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் மற்றும் சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் தங்களுக்கு சொந்தமான காலி இடத்தை விற்று பணம் கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ண மூர்த்தி மறுப்பு தெரி வித்துள்ளார்.

    இந்நி லையில் மனமுடைந்த பூபதி தனது மனைவி, மகன்கள் மற்றும் மகளையும் சேர்த்து அழைத்து கொண்டு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த செல்லன ஹள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை யோரம் உள்ள மாந்தோப்பில் குடும்பத்துடன் அமர்ந்து பூச்சி மருந்து குடித்து உள்ளனர்.

    பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் இருந்தவர்களை கண்டு காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு மயங்கிய நிலையில் இருந்த 5 பேரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×