search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்மார்க்கெட் அருகே தேங்கும் குப்பைகள்
    X

    தேங்கி கிடக்கும் குப்பைகள்.

    மீன்மார்க்கெட் அருகே தேங்கும் குப்பைகள்

    சேலம் சூரமங்கலம் மீன்மார்க்கெட் அருகே தேங்கும் குப்பைகளால், அங்கு குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் தர்மம் நகர் முதல் தெருவில் சூரமங்கலம் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் ஏராளமான பொது–மக்கள் மீன் வாங்கிச் செல்கின்றனர்.

    இந்த மீன் மார்க்கெட் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது, மேலும் இதன் அருகே குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்வே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×