search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் அருகே குடிபோதையில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி சாவு
    X

    தொழிலாளி பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.

    தாரமங்கலம் அருகே குடிபோதையில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி சாவு

    தாரமங்கலம் அருகே குடிபோதையில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி பலியானர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பாப்பம்பாடி சந்தை பேட்டை அருகே உள்ள அரசு மதுபான கடை அருகே நேற்று மாலை 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து குடிமகன்கள் தாரமங்கலம் போலீசாறுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு சென்று தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் (48) என்பதும், அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதையில் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. ஆறுமுகம் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    Next Story
    ×