என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழவேற்காட்டில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா
    X

    பழவேற்காட்டில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

    • பழவேற்காட்டில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • வீல் சேர், சைக்கிள், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய 52 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைத்து சென்னை சமூக சேவை சங்க தொடர் செயல்பாடுகளாக உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஒருங்கிணைப்பாளர் ஹாஜா முகைதீன் ஏற்பாட்டில் இயக்குனர் எம்.வி.ஜேக்கப் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜி.ரவி பங்கேற்று வீல் சேர், சைக்கிள், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.கே.தமின்ஷா, செவ்வழகி எர்ணாவூரான், கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன், சமூக ஆர்வலர்கள் பழவை முகம்மது அலவி, வஞ்சிவாக்கம் அசோக் பிரியதர்ஷன், பழவேற்காடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாத்திமா மூசா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×