search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் வெங்காய விளைச்சல் பாதிப்பு
    X

    தருமபுரியில் வெங்காய விளைச்சல் பாதிப்பு

    • ஈரப்பதம் காரணமாக சேதமடைந்து, சந்தைகளுக்கு வெங்காய வரத்து குறைந்தது.
    • ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.80, 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த முத்து கவுண்டன் கொட்டாய் சவுளூர், செல்லியம்பட்டி, பாலக்கோடு, கம்பைநல்லூர், இருமத்தூர், சோகத்தூர், அதக்கபாடி, இண்டூர், கிருஷ்ணாபுரம், பாப்பாரப்பட்டி மற்றும் நல்லம்பள்ளி பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு, சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு பொதுவாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டு, அதிகளவு மழை பெய்ததால், பல வயல்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டு, பயிர்கள் கருகின. மேலும் மழைக்குப் பின்பு தொடர்ந்து கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால் வயல்களில் வெங்காய பயிர்கள் கருகி வளர்ச்சி இன்றி அழிந்து வருகிறது. சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காயம் கூட ஈரப்பதம் காரணமாக சேதமடைந்து, சந்தைகளுக்கு வெங்காய வரத்து குறைந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:-

    இரண்டு மாதங்களாகவே சின்னவெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. ஆனால், விளைச்சல் இழப்பு காரணமாக இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. ஆறு மாதங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி, சின்ன வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், வெங்காயத்தை மழையில் இருந்து பாதுகாப்பது மிகவும் கடினம் என்பதால், சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காயமும் ஈரப்பதத்தால் அழுகி வருகிறது.

    மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படும் பெரும்பாலான வெங்காயத்தை, சில்லரை சந்தைகளில், ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.80, 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், ஏப்ரல் மாத முதல் அக்டோபர் மாதம் வரை 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இன்று உழவர் சந்தையில் கிலோ வெங்காயம் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×