என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் கடலில் நள்ளிரவில் சூறாவளி.. அதிகாலையில் மழை: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
- காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்.
- மீன்பிடி வலைகள், மரைன் மிஷின் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வீடுகள் அருகே கொண்டு வந்து வைத்தனர்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அல்லது நாளை வலுவடைந்து, மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு "ரெட் அலெர்ட்" செங்கல்பட்டு மாவட்டத்திற்கு "மஞ்சள் அலெர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் கடலில் சூறாவளி போன்று பலத்த காற்று வீசியது. அது அதிகாலைவரை நீடித்து மழையும் பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தங்களது மீன்பிடி வலைகள், மரைன் மிஷின் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வீடுகள் அருகே கொண்டு வந்து வைத்தனர். படகுகளையும் கடலோரப்பகுதியில் உயரமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Next Story






