search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மண்எண்ணை கேனுடன் வந்த   தம்பதியினரால் பரபரப்பு
    X

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மண்எண்ணை கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு

    • கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மண்எண்ணை கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பான சூழல் நிலவியது.
    • கௌசல்யாவை அதே ஊரை சேர்ந்த ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கினர்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை கணவன், மனைவி மனு கொடுக்க நேரில் வந்தனர். அப்போது மனுவுடன் மண்எண்ணை பாட்டிலும் கொண்டு வந்தனர். இதனை பார்வையிட்ட போலீசார் அந்த தம்பதியரிடம் இருந்தமண்எண்ணை பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அரசு குடி காலனி சேர்ந்தவர் கருப்பன். இவரது மனைவி கொடியம்மாள் என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று கருப்பன், இவரது மருமகள் கௌசல்யாவை அதே ஊரை சேர்ந்த ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கினர். இது சம்பந்தமாக சிறுபாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சிறுபாக்கம் போலீசார் நாங்கள் கொடுத்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். அப்போது இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×