search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு: மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவு
    X

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற காட்சி.

    கடலூர் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு: மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவு

    • மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 19 மனுக்களும், இதர மனுக்கள் 225 ஆக மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டன.
    • ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர், செப்.12-

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவல ர்களுடன் மாவட்ட கலெ க்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளி கள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

    நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 142 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 44 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 59 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 63 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 38 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், மாற்றுத்தி றனாளி நல அலுவலகம் தொடர்பாக 19 மனுக்களும், இதர மனுக்கள் 225 ஆக மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதா ரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவி த்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் குறி த்தான மனு க்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறை களுக்கு உட்பட்டு விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×