search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்ட  சட்டப்பணிகள் ஆணைக்குழு நேர்முகத் தேர்வு தற்காலிகமாக நிறுத்தம்: மாவட்ட முதன்மை நீதிபதி அறிவிப்பு
    X

    கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நேர்முகத் தேர்வு தற்காலிகமாக நிறுத்தம்: மாவட்ட முதன்மை நீதிபதி அறிவிப்பு

    • கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நேர்முகத் தேர்வு தற்காலிகமாக நிறுத்தம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி அறிவித்துள்ளார்.
    • நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் அலுவலகத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேற்படி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நாளை மறுநாள் (25 -ந்தேதி) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின் பேரில் நாளை மறுநாள் 25ந்தேதி நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்த கடலூர் மாவட்ட நீதிமன்ற http://districts.ecourts.gov.in/Cuddalore என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளுமாறு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×