search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
    X

    தருமபுரி பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

    • சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • .போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தருமபுரி,

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தருமபுரிமண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தருமபுரியில் இருந்து சென்னை, பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சேலத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    இதுபோல் பாலக்கோடு, அரூா், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, கிருஷ்ணகிாி, ஓசூா் பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தருமபுரி மண்டலத்தில் இருந்து மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல அதிகாாிகள் தொிவித்தனா்.

    இந்நிலையில் வெளியூர் செல்வதற்காக தருமபுரி பஸ் நிலையத்தில் இரவிலிருந்தே பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    பல பஸ்களில் நின்றவாறே கூட பயணித்து சென்றனர்.இதனால் தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×