search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 3 வாலிபர்களுக்கு தீவிர சிகிச்சை
    X

    மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 3 வாலிபர்களுக்கு தீவிர சிகிச்சை

    • அஜீத்குமார் (வயது 23). இவரது நண்பர்கள் நவீன் (20) , அருள்மணி (20). 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு பூசாரிப்பட்டியிலிருந்து, கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டி ருந்தனர்.
    • இதில் பாலத்தில் இருந்து 3 பேரும், 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 23). இவரது நண்பர்கள் நவீன் (20) , அருள்மணி (20). 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு பூசாரிப்பட்டியிலிருந்து, கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவி னர் வீட்டிற்கு வந்து கொண்டி ருந்தனர். அப்போது கந்தம்பட்டி பைபாஸ் கடந்து, பட்டர் பிளை மேம்பாலத்தில் ஏறினர்.

    பாலத்தின் வளைவில் திரும்பும் போது, மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தில் இருந்து 3 பேரும், 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாய மடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×