என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட மாடு.
குஜிலியம்பாறை பகுதியில் கண்புரை நோயால் பார்வையிழந்த மாடுகள்
- மாடுகளுக்கு கண்புரை நோய் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் இளம் ஊதா நிறத்தில் மாறியது.
- 10-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் 2 மாடுகள் கண்பார்வை முழுமையாக இழந்துள்ளன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே நாகையகோட்டையை சேர்ந்தவர் பாலுபாரதி. விவசாயியான இவர் மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இவர் வளர்த்து வரும் மாடுகளுக்கு கண்புரை நோய் பாதிப்பு ஏற்பட்டது. கண்கள் இளம்ஊதா நிறத்தில் மாறியது.
இதேபகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் 2 மாடுகள் கண்பார்வை முழுமையாக இழந்துள்ளன. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்ைகயும் எடுக்கப்படவில்லை.
இேதபோல் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள பல்வேறு மாடுகளும் கண்புரைநோயால் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






