என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஒட்டன்சத்திரத்தில் நகர்மன்ற கூட்டம்
- ஒட்டன்சத்திரத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
- இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. நகரச் செயலாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான வெள்ளைச்சாமி, நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, ஆணையாளர் தேவிகா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணி க்கு ஒப்பந்த பணியாளர் நியமிப்பது, பழனி கவுண்டன் புதூர், கொசவபட்டி காலனி பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டுவது,
புதிய மின் விளக்குகள் அமைத்தல், காப்பிலியபட்டி உரக் கிடங்குகளில் மியாவாக்கி அடர்வன காடுகள் அமைத்துப் பராமரித்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






