search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யுவராஜ் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு   விசாரணை 28-ந் தேதிக்கு ஒத்தி வைப்பு
    X

    யுவராஜ் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை 28-ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

    • கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
    • கோர்ட்டின் நீதிபதி இளவழகனுக்கு எதிராக யுவராஜ் ஆவேசமாக பேசினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேரை நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட சி.ஜே.எம். கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அப்போது கோர்ட்டின் நீதிபதி இளவழகனுக்கு எதிராக யுவராஜ் ஆவேசமாக பேசினார்.

    இதை அடுத்து யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்

    டது. இந்த வழக்கு நாமக்கல் சி.ஜே.எம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால் சிறையில் உள்ள யுவராஜை கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தவில்லை. இதை அடுத்து மாஜிஸ்திரேட் செல்வராஜ் வழக்கு விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக போலீசார் சென்று விட்டதால் யுவராஜை நாமக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×