search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்
    X

    கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

    • வருகிற 28-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில்,புதிய ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக ஏற்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    ஓசூர் தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவில் எதிரே நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை முன்னிலை வகித்தார். இதில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் நாகராஜ், மாநகராட்சி மண்டல் தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி பொதுசுகாதாரக் குழுதலைவர் மாதேஸ்வரன், வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக பணிகள், ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

    கூட்டத்தின்போது, கோவில் வளாகத்தில் மலர் அலங்காரம், மின் விளக்கு அமைப்பு விழா நடைபெறும் 3 நாட்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல் குடிநீர் விநியோகம்....உள்ளிட்ட பணிகளுக்கு தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. மேலும் இந்த கூட்டத்தில், பா.ஜ.க. நிர்வாகிகள்,மாநகராட்சி கவுன்சிலர்கள், , இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் கவுண்டர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×