என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
    X

    அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்

    • நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மாது தலைமை வகித்தார்.
    • புற ஆதார முறையில் பணி நியமனம் செய்யும் அரசாணை 115 ஐ திரும்ப பெற வேண்டும்.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தருமபுரி மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட பேரவை ஆலோசனைக் கூட்டம் தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மாது தலைமை வகித்தார்.

    இதில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். புற ஆதார முறையில் பணி நியமனம் செய்யும் அரசாணை 115 ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கனகவல்லி, ராஜேஸ்வரி, வெங்கடேசன் மாநில பொருளாளர் சேரநாதன், மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாநில பொருளாளர், ராஜா மாவட்ட தலைவர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கோவிந்தராஜ், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்கம் தமிழ்ச்செல்வி, மாநில தலைவர் ராஜசேகர், மாநில செயலாளர், தேன்மொழி மாவட்டத் துணைத் தலைவர், ஜெயலட்சுமி நாராயணன், மாநில பொது செயலாளர் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×