search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டம் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

    • ஒன்றியத்தில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
    • முக்கிய வீதிகளில் சென்று ரெயில்வே கேட் அருகில் உள்ள முள்ளி ஆற்றங்கரையில் விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இந்து முன்னணி நடத்தும் சிம்ம விநாயகர் ஊர்வலம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாளை விநாயகர் சதுர்த்தி அன்று காலை 6 மணிக்கு நகரில் மற்றும் ஒன்றியத்தில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும். பின்னர் 3-ந் தேதி மாலை 6 மணிக்கு அனைத்து விநாயகர்களும் திருத்துறைப்பூண்டி பிரவி மருந்தீஸ்வரர் கோவிலின் சன்னி தெருவில் இருந்து புறப்பட்டு நகரின் வழக்கமான பாதையில் முக்கிய வீதிகளில் சென்று ரெயில்வே கேட் அருகில் உள்ள முள்ளி ஆற்றங்கரையில் விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் விழா கமிட்டியான தமிழ் பால் சிவகுமார் பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் வினோத் மாவட்ட செயலாளர் இளசு மணி முன்னாள் மாவட்ட செயலாளர் மாதவன் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் பூபதி பா.ஜ.க ஒன்றிய தலைவர் பாலாஜி பா.ஜ.க முன்னாள் நகர தலைவர் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×