என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே இன்று காலை விபத்து மினிலாரி மீது பைக் மோதி கட்டிட தொழிலாளி சாவு
- சக்தி இன்றுகாலை இருசக்கர வாகனத்தில் 3 பேருடன் ஆற்றில் குளிக்க சென்று கொண்டிருந்தார்.
- அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சின்னமஞ்சமேடு அடுத்துள்ள தாதம்பட்டியை சேர்ந்தவர் சக்தி (வயது35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (30), இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சக்தி இன்றுகாலை இருசக்கர வாகனத்தில் 3 பேருடன் ஆற்றில் குளிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டுபுலியூர் என்கிற இடத்தின் அருகில் சென்ற போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோர டிரான்ஸ்பார்மரில் மோதி பின்னர் அந்த வழியாக வந்த மினிலாரியின் மீது மோதி நின்றது.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சக்தியை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






