என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய பாலம் அமைக்கும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ரூ.9.98 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி
- மல்லிநாயனப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கப்படுகிறது.
- பணியினை அசோக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கம்மம்பள்ளி பஞ்சாயத்து சின்னேப்பள்ளி கூட்ரோட்டில் இருந்து சின்னேப்பள்ளி கிராமத்திற்கு செல்லும் வழியில், சின்னேப்பள்ளி ஏரியில் இருந்து வெண்ணம்பள்ளி ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.
இக்கால்வாயின் குறுக்கில் தரைப்பாலம் உள்ளதால் தண்ணீர் அதிகம் வரும் காலங்களிலும், மழை பெய்யும் போதும் தரைப்பாலத்தின் மீது இரண்டு அடி வரை தண்ணீர் செல்வது வழக்கம். இதனால் கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இதனால் இங்கு புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. அதே போல், மல்லிநாயனப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியினை அசோக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, பஞ்சாயத்து தலைவர் சென்றாயப்பன், ஒன்றிய துணை செயலாளர் குமரேசன், அம்மா பேரவை செயலாளர் ரமேஷ்குமார், துணைத் தலைவர் நாராயணகுமார், கவுன்சிலர் சங்கீதா சரவணன், கிளைச் செயலாளர்கள் கோவிந்தராஜ், வெங்கட்ராமன், சுப்ரமணி, சின்ராஜ், பிடிஏ தலைவர் மோகன்ராம், ஊர்கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






