search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் உயர்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி- ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    X

    சங்கரன்கோவில் அருகே ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் உயர்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி- ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

    • உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் ரூ. 21.6 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் பாக்கியம் முன்னிலை வகித்தார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பழனிசாமி, ராசையா, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் பட்டறைச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கரபாண்டி மற்றும் நாட்டாமைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×