என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கர்நாடகா - தமிழகத்தை இணைக்கும் மெட்ரோ ரெயில் சேவை பணிகள் எப்போது தொடங்கும்?- பயணிகள் எதிர்பார்ப்பு
- இரு மாநில ெரயில் பயணிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்து வதாக அமைந்துள்ளது.
- ஓசூரில் உள்ள மக்களின் கனவுத் திட்டம் இது
ஓசூர்,
மெட்ரோ ரயில் சேவையை பெங்களூர் பொம்மசந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை 20.5 கிலோமீட்டர் தூரம் நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் தமிழகம்-கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களுக்கு இடை யேயான போக்குவரத்தை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்ளலாம்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ ெரயில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக பயணித்து வருகின்றனர்.
இந்த மெட்ரோ ெரயில் சேவைகள் பெங்களூருவில் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ெரயில் சேவையை தமிழ்நாடு வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதாவது பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிப்பு செய்தால் கர்நாடகம், தமிழக மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என வலியுறுத்தப்பட்டது.
கர்நாடகம்-தமிழக எல்லையான ஓசூரில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பெங்களூரில் வேலைக்காக சென்று வருகின்றனர்.
அதேபோல் பெங்களூ ரில் இருந்தும் பலர் ஓசூர் வந்து செல்கின்றனர். இதனால் இந்த கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் தொடர்பாக கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமாரும் தொடர்ந்து மத்திய மற்றும் கர்நாடக அரசிடம் வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ெரயில் சேவையை பெங்க ளூரின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இரு மாநில ெரயில் பயணிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்து வதாக அமைந்துள்ளது.
பெங்களூர் மெட்ரோ ெரயில் திட்டத்தில் கூடுதலாக 20.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு ஓசூர் வரை நீட்டிப்பு செய்ய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதில் 11.7 கிலோமீட்டர் தூரம் கர்நாடகத்திலும், மீதமுள்ள 8.8 கிலோமீட்டர் தொலைவு தமிழகத்தில் அமையும்.
இதுபற்றி கிருஷ்ணகிரி எம்.பி.செல்லகுமார் கூறியதாவது:-
ஓசூரில் உள்ள மக்களின் கனவுத் திட்டம் இது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இரு மாநில மக்களும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயனடைவார்கள்.
இதுதொடர்பாக விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளேன். மேலும் விரிவான திட்ட அறிக்கையை வழங்ககோரி கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






