என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் காங்கிரசார் பாதயாத்திரை
- காங்கிரஸ் கட்சியின் 75-வது ஆண்டு பொன்விழா பாதயாத்திரை கோத்தகிரியில் நடைபெற்றது
- ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கலந்து 75 ஆண்டு பாதயாத்திரை நிகழ்வில் கலந்து கொண்டனர்
அரவேணு
தேசிய காங்கிரஸ் கட்சியின் 75-வது ஆண்டு பொன்விழா பாதயாத்திரை கோத்தகிரியில் நடைபெற்றது
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பாத யாத்திரை புறப்பட்டது. சில்லாபாபு தலைமை தாங்கினார். வர்த்தக பிரிவு தலைவர் லியாகத் அலி, குன்னூர் தொகுதி பொறுப்பாளர் கமலா சீராலன், மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கலந்து 75 ஆண்டு பாதயாத்திரை நிகழ்வில் கலந்து கொண்டனர். முருகன் நகரத் தலைவர் வழங்கினார்.
Next Story






