search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலத் தகராறில் மோதல்
    X

    நிலத் தகராறில் மோதல்

    • பாவடி தெரு ஆறுமுகம் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது.
    • கடந்த 17-ந்தேதி இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 20-வது வார்டு சக்கரை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி செல்வம் (வயது 55). இவருக்கும் கிழக்கு பாவடி தெரு ஆறுமுகம் (45) என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது .

    இதுதொடர்பாக கடந்த 17-ந்தேதி இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அவர்கள் காயமடைந்து ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் இருதரப்பினரும் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஆறுமுகம், செல்வம், பாலமுருகன், செல்வம், தங்கமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×