என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலத்தகராறில் மோதல்; 2 பேர் கைது
- நேற்று மீண்டும் இவருக்கும் இடையே தகராறு நடந்தது.
- இருதரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அன்பு, சசிகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள பேயனூர் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது57). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று மீண்டும் இவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இது குறித்து இருதரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அன்பு, சசிகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 9 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
Next Story






