search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில்  பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    தென்காசியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார்.
    • முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா கண்டன உரையாற்றினார்

    தென்காசி:

    தி.மு.க. அரசை கண்டித்து தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே நடை பெற்றது. மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார்.

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா கண்டன உரையாற்றினார். மாநில வர்த்தக அணி தலைவரும் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் பார்வையாளருமான ராஜா கண்ணன்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தொழில் பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்புராஜ்,சாரதா பாலகிருஷ்ணன், ராம ராஜா, பாண்டித்துரை, மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார் பால்ராஜ், பாலமுருகன், முத்துலட்சுமி பால ஸ்ரீனிவாசன்,மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ராஜலட்சுமி ஜானகி, புலிக்குட்டி,அர்ஜுனன், தென்காசி நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் மாரியப்பன், மாநில மாவட்ட அணி பிரிவு மண்டல் கிளை கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. வினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×