search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி மாயம்-வாலிபர் மீது புகார்
    X

    கல்லூரி மாணவி மாயம்-வாலிபர் மீது புகார்

    • கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
    • தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பொடாரங்கொட்டய் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி. தருமபுரி பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.காம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி தனது தந்தையுடன் சேர்ந்து விவசாய நிலத்தில் பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளார்.

    அன்று மாலை சுமார் 4 மணிக்கு கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாகர்கூடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×