என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரி மாணவி மாயம்-வாலிபர் மீது புகார்
Byமாலை மலர்29 Oct 2022 9:33 AM GMT
- கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
- தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பொடாரங்கொட்டய் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி. தருமபுரி பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.காம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி தனது தந்தையுடன் சேர்ந்து விவசாய நிலத்தில் பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளார்.
அன்று மாலை சுமார் 4 மணிக்கு கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாகர்கூடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X