search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு
    X

    சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு

    • சிறை அலுவலர் (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான போட்டித் தேர்வு நாளை நடக்கிறது.
    • விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான போட்டித் தேர்வு நாளை நடக்கிறது.

    இது குறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு நாளை 26-ந்தேதி (திங்கட்கிழமை) முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இணையவழி முறையில் (Computer Based Exam) நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 410 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.

    தேர்வு மையத்தில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.

    தேர்வு மையத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வா ணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×