search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்-பெண்கள் உள்பட 32 பேர் கைது
    X

    மறியல் போராட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்-பெண்கள் உள்பட 32 பேர் கைது

    • மின்சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வண்ணார்பேட்டையில் இருந்து ஊர்வமாக புறப்பட்டனர்.

    நெல்லை:

    மின்சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை தனியார் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நெல்லை வண்ணார்பேட்டையில் மறியல் போராட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், முத்து–கிருஷ்ணன், இசக்கியம்மாள், சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வண்ணார்பேட்டையில் இருந்து ஊர்வமாக புறப்பட்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் பெண்கள் உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×