search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட  பெங்களூர் - காரைக்கால் ரெயிலுக்கு  ஓசூரில் இன்று காலை வரவேற்பு
    X

    2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட பெங்களூர் - காரைக்கால் ரெயிலுக்கு ஓசூரில் இன்று காலை வரவேற்பு

    • இன்று காலை பெங்களூரில் இருந்து வந்த காரைக்கால் ரெயிலுக்கு ஓசூர் ரெயில்நிலையத்தில் வரவேற்பு.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    கொரோனா பரவல் அச்சுறுத்தலையொட்டி, கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூர் - காரைக்கால் பாசஞ்சர் ெரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமாரின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று காலை பெங்களூரில் இருந்து வந்த காரைக்கால் ரெயிலுக்கு ஓசூர் ரெயில்நிலையத்தில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பின்னர், கட்சியினர் செல்லகுமார் எம்.பி.யை வாழ்த்தி கோஷமிட்டனர். இதில் துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், பிரபாகரன், மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×