search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்களை காரில்   கடத்தி கொலைவெறி தாக்குதல்  மர்மகும்பலுக்கு வலைவீச்சு
    X

    கல்லூரி மாணவர்களை காரில் கடத்தி கொலைவெறி தாக்குதல் மர்மகும்பலுக்கு வலைவீச்சு

    • ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மாணவர்கள் 3 பேரையும் காரில் ஏற்றி கடத்தி சென்றது.
    • கடத்தி சென்று அடித்து உதைத்த கும்பல் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, எதற்காக கடத்தலில் ஈடுபட்டு தாக்கினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி கிராமம் தொட்டியனூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பையன். இவருடைய மகன் நாகராஜ். இவர் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். நாகராஜும், அதே ஊரை சேர்ந்த சண்முகம் என்பவரும் ஒரே கல்லூரி ஒன்றாக பி.பி.ஏ படித்து முடித்துள்ளனர்.

    இந்தநிலையில், நேற்று படிப்பு சான்றிதழ் வாங்குவதற்காக மேச்சேரி கல்லூரிக்கு நாகராஜ், சண்முகம்மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேர் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். மேச்சேரி சென்ற 3 திரும்பி வரும்போது, மேச்சேரி அருகேயுள்ள சந்திரமாள் கடை பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் 3 பேரும் டீ குடித்துள்ளனர். அப்போது ஆம்னி கார் ஒன்று அவர்கள் அருகில் வந்து நின்றது.

    பின்னர் அதிலிருந்து இறங்கிய ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மாணவர்கள் 3 பேரையும் காரில் ஏற்றி கடத்தி சென்றது. பின்னர் அருகில் உள்ள ஏரிக்கு அவர்களை கொண்டு சென்றனர். பின்னர் அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர், 3 பேரையும் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், வெட்டி கொலை செய்துவிடுவதாகவும், ஜெயிலுக்கு செல்வ தெல்லாம் ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல என்றும் கூறியபடியே கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், நான் கடத்தி வர சொன்னது இவர்கள் இல்லை, அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறிய பின்னர் 3 பேரையும் உயிரோடு விட்டனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறிதித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில் சரியான நேரத்தில் அந்த நபர் வராவிட்டால், எங்களை அடித்தே கொலை செய்திருப்பார்கள் என கண்ணீர் மல்க கூறினர்.

    இந்த கடத்தல் சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் நாகராஜ் உட்பட 3 பேரை காரில் கடத்தி சென்று அடித்து உதைத்த கும்பல் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, எதற்காக கடத்தலில் ஈடுபட்டு தாக்கினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவர்களை கடத்தி மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×