என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி
    X

    கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

    • கோவிந்தன் என்பவரது நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கினார்.
    • காப்பாற்ற நீரில் மூழ்கி தேடினர். ஆனால் பிரகாஷ் மூச்சு திணறி உயிரிழந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் மாரண்டஅள்ளி மின்வாரிய த்தில் ஒயர்மேனாக உள்ளார்.இவரது மகன் பிரகாஷ் (வயது20). இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.நேற்று நண்பகலில் அதே பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரது நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற நீரில் மூழ்கி தேடினர். ஆனால் பிரகாஷ் மூச்சு திணறி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×