search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் கொக்கிலமேட்டில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு
    X

    நிஷாந்தினி

    மாமல்லபுரம் கொக்கிலமேட்டில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு

    • மாணவி நிஷாந்தினி மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
    • பெற்றோரும், உடன் படித்த தோழிகளும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை நடத்துபவர் ரவீந்திரன். இவரது மகள் நிஷாந்தினி (வயது 18). இவர் பொன்னேரியில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    இவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் உடலைப் பார்த்து பெற்றோரும், உடன் படித்த தோழிகளும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இளம் வயதில் டெங்குவிற்கு கல்லூரி மாணவி பலியானதால் கொக்கிலமேடு கிராமமே சோகமயமாக காணப்பட்டது.

    Next Story
    ×